Wednesday 8th of May 2024 02:58:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனேடிய பழக்குடியின சிறுவர் புதைகுழி  விவகாரம் தொடர்பில்  விசாரணை ஆரம்பம்!

கனேடிய பழக்குடியின சிறுவர் புதைகுழி விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!


கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் – கம்லூப்ஸில் அமைந்துள்ள முன்னாள் இந்தியன் குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் கனேடிய ஆர்.சி.எம்.பி. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கம்லூப்ஸ் பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பழங்குடித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குடியிருப்புப் பள்ளி கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இது குறித்து உடனடி விசாரணைகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

கனடா முழுவதும் உள்ள குடியிருப்புப் பள்ளிகளில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் உள்ளனவா? என ஆராயுமாறும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே கம்லூப்ஸில் அமைந்துள்ள முன்னாள் இந்தியன் குடியிருப்புப் பள்ளியில் 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் கனேடிய ஆர்.சி.எம்.பி. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE